தமிழக ஆளுநர் திடீர் தில்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ள நிலையில் கடந்த வாரம் தில்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் இந்த வாரம் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், திடீர் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...