நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் மின்விளக்கு ரத பவனி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் புதன்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.

News image

தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் நடைபெற்ற மின்விளக்கு ரத பவனி.

Updated On :7 ஏப்ரல் 2022, 9:14 am IST


மானமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் புதன்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மின்விளக்கு ரத பவனியை முன்னிட்டு கோயிலுக்கு முன்னர் மின் விளக்கு அலங்காரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரததுதுக்கு உற்சவர் முத்துமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன் பின்னர் தீபாராதனை முடிந்து ரதம் நிலையிலிருந்து புறப்பட்டது.

இதில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து ரதத்தை இழுத்து வந்தனர். கோயிலைச் சுற்றி ரதம் பவனி வந்து நிலை சேர்ந்தது. ரதம் பவனி வருதல் நிகழ்ச்சியில் கோயில் பரம்பரை அறங்காவலர் மு. வெங்கடேசன் செட்டியார், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.