சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடவில்லை: இபிஎஸ்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து தமிழக அரசு வாதாடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
Updated On :7 ஏப்ரல் 2022, 7:48 am

DIN

வன்னியர்களுக்கான 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து தமிழக அரசு வாதாடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியபோதே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சாதிவாரியாக கணக்கெடுக்க ஆணையம் அமைக்கப்பட்டு 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், ஆணையத்திற்கான காலஅவகாசத்தை நீட்டிக்கவில்லை.

இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடிய அரசு, மதுரை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாதது ஏன்? தரவுகளை சமர்பிக்காதது ஏன்?

இதையெல்லாம் மறைத்துவிட்டு முந்தைய ஆட்சி மீது பழிசுமத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.