மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

புதிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம்: ஜெ.ராதாகிருஷ்ணன் 

தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம்

News image

மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

Updated On :7 ஏப்ரல் 2022, 10:04 am

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா, ஒமைக்ரான் வைரஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை. ஒரு நாள் பாதிப்பு 20 முதல் 30 ஆக உள்ளது. கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தியவர்கள் தவிர, மற்றவர்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது.  முககவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை பின்பற்ற வேண்டாம் எனக்கூறவில்லை என்று ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒமைக்ரான்-எக்ஸ்இ கரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. உருமாறுவது என்பது ஆர்.என்.ஏ வைரசின் பழக்கம். நாம் பதட்டப்படாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.