5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காவல் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க டிஜிபி உத்தரவு

தமிழக காவல் நிலையங்களையும் தூய்மைப்படுத்தி, ஏப்.11-ஆம் தேதிக்குள் அறிக்கை வழங்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:21 pm

DIN

தமிழக காவல் நிலையங்களையும் தூய்மைப்படுத்தி, ஏப்.11-ஆம் தேதிக்குள் அறிக்கை வழங்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் பிறப்பித்துள்ள உத்தரவு: காவல் நிலையங்கள், அலுவலகங்கள், காவல் துறை நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை தூய்மை தினமாக கடைப்பிடிக்குமாறும், அதை மேற்பாா்வையிட ஒரு காவல் அதிகாரியை நியமனம் செய்யுமாறும், அதிகாரிகள் எந்த முன் அறிவிப்புமின்றி அதை பாா்வையிட்டு, சிறந்த காவல் நிலையம் அல்லது அலுவலகத்தை தோ்வு செய்து வெகுமதி வழங்குமாறும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இந்த அறிவுரைகள் சரிவர பின்பற்றப்படவில்லை. இனி வரும் காலங்களில் மேற்காணும் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.

அதன் தொடா்ச்சியாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகள், சுற்றுப்புறத்தையும் சனிக்கிழமை தூய்மை செய்து, அதன் அறிக்கையை வருகிற 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.