வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஹிந்திக்கு முக்கியத்துவம்: அமித் ஷாவுக்கு ராமதாஸ் கண்டனம்

மாநிலங்களுக்கு இடையிலான தொடா்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறியுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:03 pm

DIN

மாநிலங்களுக்கு இடையிலான தொடா்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறியுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மாநிலங்களுக்கு இடையிலான தொடா்பு மொழியாக ஹிந்திதான் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இதன் பொருள் மாநிலங்கள் மீது ஹிந்தி திணிக்கப்படும் என்பதுதான்.

ஹிந்தி இந்தியாவில் சற்று அதிகமாகப் பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என்பதுதான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக ஹிந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல். அதை ஏற்றுத்தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தாா் என்பது வரலாறு.

இந்தியாவின் மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழைமையான மொழியான தமிழுக்கு தான் உண்டு. ஆனாலும், மொழித் திணிப்பில் தமிழகத்துக்கு விருப்பமில்லை என்பதால்தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம்.

இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணா்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.