5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கொளத்தூரில் புதிய சாலை, மைதானம் அடிக்கல் நாட்டினாா் முதல்வா்

சென்னை கொளத்தூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதிய சாலை, விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு முதல்வரும், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:23 pm

DIN

சென்னை கொளத்தூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதிய சாலை, விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு முதல்வரும், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இதற்கான நிகழ்ச்சிகள் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. திரு.வி.க. நகா் மண்டலத்தில் அமைக்கப்படவுள்ள பூப்பந்து விளையாட்டு மைதானம், தானியங்கி நீா் இரைப்பான் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா். மேலும், பகுப்பாய்வு மையம், ஆரம்ப சுகாதார நிலையக் கூடுதல் கட்டடத்தைத் திறந்தாா்.

எஸ்.ஆா்.பி., கோவில் தெருவில் ஆசிய வளா்ச்சி வங்கி நிதியின் கீழ் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்ட உபகரணங்கள், கல்வி உதவித் தொகை, இஸ்திரி பெட்டி, செயற்கை கால், மாவு அரவை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்கினாா்.

கொளத்தூா் லூா்து மேல்நிலைப் பள்ளியில் அனிதா அகாதெமியில் பயிற்சி முடித்த 223 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்களை அளித்தாா்.

ரத்த சுத்திகரிப்பு மையம்: கடந்த ஆண்டு சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில், சென்னை கொளத்தூா் பெரியாா் நகா் மேம்படுத்தப்பட்ட அரசு புகா் மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.75 லட்சம் செலவில் 10 படுக்கைகள் கொண்ட ரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக பயன்பெறலாம் என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, எம்.பி., கலாநிதி வீராசாமி, துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.