தமிழ்ப் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையைத் தொடர்ந்து சனிக்கிழமையான ஏப்ரல் 16ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டும், ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளியும் கொண்டாடப்படுவதால் ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 17ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை முடிந்து ஏப்ரல் 18ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் தமிழக அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.