சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழக அரசு

ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :14 ஏப்ரல் 2022, 6:53 am

DIN

ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததால் சிபிஎம், சிபிஐ, விசிக, மனிதநேய மக்கள் கட்சியினர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்,என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் திடீரென இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

“தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார். தற்போதைய சந்திப்பிலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக எந்த உறுதியும் வழங்கவில்லை.

தமிழக சட்டப்பேரவை மாண்பையும், மக்களையும் மதிக்காததால் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறவுள்ள தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்க போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.