குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சங்ககிரியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் 

விவசாய நிலங்கள் வழியாக உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன்நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்

News image

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வருவாய்கோட்டாட்சியர் கோ.வேடியப்பன்.

Updated On :22 ஏப்ரல் 2022, 2:32 pm IST

சங்ககிரி: சேலம் மாவட்டம்,  சங்ககிரி வட்டம், தேவூர் துணைமின் நிலையத்திலிருந்து எடப்பாடி வட்டம் குருமபட்டி துணைமின் நிலையம் வரை விவசாய நிலங்கள் வழியாக உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன்நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சங்ககிரி வட்டச் செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். 

விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட  துணைத்தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள்,  சேலம் மாவட்டச் செயலர் ஏ.ராமமூர்த்தி மற்றும் விவாசயிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

Story image

உயர்மின்னழுத்த கோபுரங்களை சரபங்கா நதிக்கரையோரம் கேபிள் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர்.

தேவூரிலிருந்து குருமபட்டி வரை செல்லும் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் சரபங்கா நதிக்கரையோரம் கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும், விவசாய நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள முன்நுழைவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும், முன்நுழைவு அனுமதியை ரத்து செய்யும் வரை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட சங்ககிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு நுழைய முற்பட்டனர். 

அப்போது சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி.ஆரோக்கியராஜ் தலைமையில் போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். பின்னர் விவாசயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன் விவசாயிகளிடம் கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறு கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.