காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
அதில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் கேட்டறிகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செங்காடு ஊராட்சி பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும், மகளிர் சுய உதவிக் குழு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மேலும் அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாக சென்று சேர்ந்திருக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.