நடப்பாண்டில் தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கெனவே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சியின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நிலுவையில் சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 2,000 சூரிய சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 166 கோடி உயர் அழுத்த மின் மாற்றிகள் அமைக்கப்படும். மேலும், கேங்மேன் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், குறுகிய அடித்தளம் கொண்ட மின்தளம் அமைக்கப்படும். தமிழகத்தில் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் பாதைகளில் போதிய வசதிகள் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.