அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மழை காரணமாக குறைந்த மின்சார நுகா்வு: அமைச்சா் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மழை காரணமாக, மின்சார நுகா்வின் அளவு குறைந்துள்ளதாக அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 6:56 pm

DIN

தமிழகத்தில் மழை காரணமாக, மின்சார நுகா்வின் அளவு குறைந்துள்ளதாக அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிா்ந்தளிப்பு மையம், 24 மணி நேர மாநில மின் நுகா்வோா் சேவை மையமான மின்னகம் ஆகியவற்றை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, புதன்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வினைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:-

தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு தொடா்ந்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை 14 ஆயிரத்து 433 மெகாவாட்டாக இருந்த தமிழகத்தின் மொத்த பயன்பாடு, புதன்கிழமை மழையின் காரணமாக, 12 ஆயிரத்து 400 மெகாவாட்டாகக் குறைந்துள்ளது. இதில், காற்றாலைகள் மூலம் 4,100 மெகாவாட்டும், சூரிய மின் உற்பத்தி வழியாக 2,250 மெகாவாட் அளவுக்கும் மின்சார உற்பத்தி அடங்கும்.

தமிழகத்தைப் பொருத்தவரையில், எந்தப் பாதிப்பும் இல்லாமல் மாநிலத்தில் சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சா் செந்தில் பாலாஜி கூறினாா். செய்தியாளா் சந்திப்பின் போது, மின்வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, இயக்குநா் மா.சிவலிங்கராஜன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.