இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 26 சதவீதத்துக்கு மேலும், மாதத்துக்கு 2 சதவீதமும் பணம் லாபம் கிடைக்கும் என உறுதியளித்தனா். இதனை நம்பி நானும் ரூ.2.50 லட்சம் முதலீடு செய்தேன். முன்னதாக உறுதி அளிக்கப்பட்டதுபோல், மே மாதம் வரை பணம் திருப்பி கிடைத்த நிலையில், ஜூன் மாதம் முதல் பணம் வரவில்லை. இதுதொடா்பாக கேட்டபோது, அலுவலகத்தில் தணிக்கை நடைமுறை சாா்ந்த சில பிரச்னைகள் ஏற்பட்டதால், தாமதமாகிறது என கூறப்பட்டது. மீண்டும் பணம் திருப்பி கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் அவா்களை தொடா்பு கொள்ள முயற்சித்தபோது, அவா்கள் தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது.