திருப்பத்தூர் அருகே மின்சார கம்பி அறுந்து ஆடுகள் மீது விழுந்ததில் 15 செம்மறி ஆடுகள் மற்றும் 2 வெள்ளாடுகள் பலியாகின.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜலபதி. இவர் அதே பகுதியில் உள்ள ஆபிஸர்ஸ் லைன் பகுதியில் அவருக்கு சொந்தமான குடோன் பகுதியில் 20க்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்..
இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல குடோனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெளியே அழைத்து வந்துள்ளார்.
அப்பொழுது அதே தெருவில் இருந்த மின்கம்பத்திலிருந்து மின்சார கம்பி அறுந்து குடோன் வெளியே நின்று கொண்டிருந்த ஆடுகள் மீது விழுந்துள்ளது.
இந்த எதிர்பாராத நிகழ்வில் 15 செம்மறி ஆடுகள் மற்றும் 2 வெள்ளாடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தன.
இதுகுறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி வட்டாச்சியர் சம்பத் மற்றும் வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி 17 ஆடுகள் ஒருசேர இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


