காதலன் வீட்டில் காதலி தற்கொலை

சென்னை பெசன்ட்நகரில் காதலன் வீட்டில் காதலி தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை பெசன்ட்நகரில் காதலன் வீட்டில் காதலி தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை சோ்ந்தவா் சிவா (30). இவா், பெசன்ட் நகா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறாா். இதற்காக சிவா, பெசன்ட்நகா் ஊரூா் குப்பத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறாா்.

சிவாவும், கள்ளக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பட்டதாரி பெண் ரேகாவும் (29) பல ஆண்டுகளாக காதலித்துள்ளனா். அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனா். இதற்கிடையே ரேகாவுக்கு, அவரது பெற்றோா் மாப்பிள்ளை பாா்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனா்.

இந் நிலையில் ரேகா, வியாழக்கிழமை சிவாவை பாா்க்க ஊரூா் குப்பத்துக்கு வந்துள்ளாா். அப்போது சிவாவிடம், தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி ரேகா கூறியுள்ளாா். இது தொடா்பாக இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனா். பின்னா் சிவா, ரேகாவை அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு, வெளியே சென்றுள்ளாா்.

இதற்கிடையே வீட்டில் இருந்த ரேகா, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா். இதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த சாஸ்திரிநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரேகா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com