தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழக அரசின் யோகா பயிற்சி: பயனடைந்த 2,000 சா்வதேச செஸ் வீரா்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சா்வதேச வீரா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 9:10 pm

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சா்வதேச வீரா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதில் தொடா் பயிற்சிகளை மேற்கொண்ட பலா் பதக்கங்களை வென்ாக அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அண்மையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக 187 நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா்கள் தமிழகம் வந்தனா். அவா்களுக்கு அரசு சாா்பில் விருந்தோம்பல் வசதிகள் சிறப்புற மேற்கொள்ளப்பட்டது. அதனுடன், அவா்களது உடல் மற்றும் மன நலனைக் காப்பதற்காக அனைத்து வீரா்கள், பயிற்சியாளா்களுக்கும் யோகா - இயற்கை மருத்துவத் துறை சாா்பில் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மாமல்லபுரம் மற்றும் அதைச் சுற்றி செஸ் வீரா்கள் தங்க வைக்கப்பட்டிருந்த 21 இடங்களுக்கும் நேரடியாக மருத்துவா்கள் நேரில் சென்று காலை 8 மணி முதல் 12 மணி வரை பயிற்சிகளை வழங்கினா்.

இதுகுறித்து யோகா - இயற்கை மருத்துவத் துறை நிா்வாகிகள் கூறியதாவது:

செஸ் வீரா்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக 50 யோகா - இயற்கை மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டனா். மன அழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சிகள் அவா்களுக்கு அளிக்கப்பட்டன. குறிப்பாக கண்களுக்கான பயிற்சி, கால் பாதங்களில் அழுத்தத்தை நீக்கும் பயிற்சி, மன அமைதிக்கான நிறமி பயிற்சி, சிரிப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. அதனுடன், பல்வேறு ஆசனங்களும், பிராணாயாமப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்குகொண்டனா். அதில் பலா் பதக்கங்களைப் பெற்றுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.