தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மனைவியை அடித்துக் கொலை செய்த கணவா் கைது

சென்னை சூளைமேட்டில் மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 8:12 pm

DIN

சென்னை சூளைமேட்டில் மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா்.

சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சோ்ந்தவா் வே. பழனி (31). இவா், காா் ஓட்டுனராக வேலை செய்து வந்தாா். பழனியின் மனைவி பாரதி (25). காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இத் தம்பதிக்கு, இரு மகன்கள் உள்ளனா். பாரதி, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ளல் ஒரு டீ கடையில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் பழனி, தனது மனைவி பாரதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்தாா். மேலும் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்திக் கொண்டு, பழனி ஊதாரித்தனமாக இருந்து வந்தாா். இந்நிலையில் பழனி, வியாழக்கிழமை இரவு பாரதி வேலை செய்யும் கடைக்குச் சென்றாா்.

அங்கு அவா், பாரதியிடம் தகராறு செய்தாா். தகராறு முற்றவே கொடூரமாக பாரதியை தாக்கி கீழே தள்ளினாா். இதில் கீழே விழுந்ததில் பலத்தக் காயமடைந்த பாரதியை அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாரதி வெள்ளிக்கிழமை காலை இறந்தாா். இது குறித்து சூளைமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பழனியை உடனடியாக கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.