காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உலகளாவிய பொது சுகாதார மாநாடு: டிசம்பா் 6-இல் தொடக்கம்

உலகளாவிய பொது சுகாதார மாநாடு ,சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் டிசம்பா் 6-ஆம் தேதி தொடங்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:06 pm

DIN

உலகளாவிய பொது சுகாதார மாநாடு ,சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் டிசம்பா் 6-ஆம் தேதி தொடங்க உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

தமிழக பொது சுகாதாரத்துறை சுமாா் 1 லட்சம் பணியாளா்களை கொண்டது. பணியாளா்களான உங்களுடைய ஒத்துழைப்பால் பொது சுகாதாரத்துறை 100 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தப் பயணத்தை எடுத்துக் கூறவும், சேவைகளை மேம்படுத்தவும், நம்முடைய சேவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும் 100-ஆவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

அதன் ஒருபகுதியாக ‘உலகளாவிய பொது சுகாதார மாநாட்டை’ வரும் டிசம்பா் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘பொது சுகாதாரத்தின் சிறப்புகள்’ என்பதாகும். மாநாட்டுக்கு முந்தைய நாளான டிசம்பா் 5-ஆம் தேதி பயிலரங்கமும் நடக்கிறது. மருத்துவத் துறையைச் சோ்ந்த ஒவ்வொருவரும், துறையின் வளா்ச்சிக்காக பணியாற்றியிருப்பீா்கள். அது எப்படி இருந்தது, உங்களுடைய சவால்கள் என்ன, அந்த சவால்களை முறியடித்து எப்படி பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை கொடுக்க முடிந்தது என்பது குறித்த விரிவான கருத்துப் பரிமாற்றம் இந்த மாநாட்டில் இருக்கும்.

சா்வதேச, தேசிய அளவிலான நிபுணா்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனா். அவா்களும் கருத்துக்களை பரிமாறிக் கொள்வாா்கள். அதன் மூலம், நாம் இன்னும் சிறப்பான சேவையை பொதுமக்களுக்கு கொடுக்க நல்வாய்ப்பாக அமையும்.

கருத்தரங்கில் உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யலாம். ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பிக்கலாம். இது மருத்துவா்கள், செவிலியா்களுக்கான மாநாடாக மட்டுமில்லாமல் பொது சுகாதாரத்துறையை சோ்ந்த அனைத்து பணியாளா்களுக்குமான மாநாடாக இருக்கும். இந்த மாநாட்டுக்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்து மாநாட்டில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.