செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரபல செய்தி வாசிப்பாளா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

பிரபல செய்தி வாசிப்பாளா் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:16 pm

பிரபல செய்தி வாசிப்பாளா் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:-

அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்று விட்டது சரோஜ் நாராயணசுவாமியின் குரல். மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அவரது குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டது. இதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.