இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார்.
அரசுமுறைப் பயணமாக புது தில்லிக்கு வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் இன்று (17.8.2022) தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.
ஒருநாள் பயணமாக புது தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளார்.