கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த பருவமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், அருவிகளில் குளிப்பதற்கும் தடை விதித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வந்ததால் இந்த தடை 37 நாள்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது.