சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 12 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் கடந்த 12-ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை போதைப் பொருள் விற்ாக தனிப்படையினரால் 10 வழக்குகள் பதியப்பட்டு, 12 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 15 கிராம் மெத்தம்பெட்டமைன்,1,200 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டாா் சைக்கிள்கள்,கைப்பேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா்.