சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்கலாம் | ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொண்டை சளி, மலக்கட்டு நீங்க...!
இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், ஆவடி, போரூர், செம்பரம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.