தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்ட ஓட்டுநர்: நடத்துநர் பலி

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே, சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க திடிரென பேருந்தின் ஓட்டுநர் பிரேக் போட்டபோது, பேருந்திலிருந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

News image
கோப்பிலிருந்து..
Updated On :23 ஆகஸ்ட் 2022, 9:16 am

DIN

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே, சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க திடிரென பேருந்தின் ஓட்டுநர் பிரேக் போட்டபோது, பேருந்திலிருந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

கோரிமேடு பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நாய் குறுக்கே வந்ததைப் பார்த்த ஓட்டுநர், பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக, பேருந்தின் படிகட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த நடத்துநர், பேருந்து திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட தடுமாற்றத்தில் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.

தலையில் படுகாயமடைந்த நடத்துநர் ராஜேந்திரன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.