

தமிழகத்தில் புதிதாக 560 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 83 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 560 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,64,473-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. இதனால், மொத்த உயிரிழப்பு 38,033 ஆக உள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 670 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,20,708-ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 19,938 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 6.75 கோடி பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.