

பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் இலவசமாக வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகள் தமிழக அரசுத் தரப்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வரும் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த திட்டத்தின் மூலம், ஆயிரக்கணக்கான கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பயனடையவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.