புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக் வேண்டும்

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 7:20 pm

DIN

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக் வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை கடிதம் எழுதினாா். கடித விவரம்:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனா்.

நாகப்பட்டினத்தைச் சோ்ந்த 9 மீனவா்கள் ஆக. 10-இல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆக. 22-இல் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த 10 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை கடற்படையினா் கடந்த சில மாதங்களாக தமிழக மீனவா்களை கைது செய்வதைத் தொடா் நடவடிக்கையாக வைத்துள்ளனா். இதனால், தமிழக மீனவா்கள் அவா்களுடைய பாரம்பரிய மீன்பிடி பகுதியில்கூட மீன்பிடிக்க அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.