

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 9 பேருக்கு செப்.6 ஆம் தேதி வரை சிறை விதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 22ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | ‘என் ரோபோவுக்கு கோபம் வரும்’: சென்னை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
அதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகை மீனவர்களுக்கு செப்.6 தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.