விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மதுவைத் தவிர்ப்போம், மரத்தை நடுவோம்! மணப்பாறையில் விழிப்புணர்வு மாரத்தான்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் 'மதுவைத் தவிர்ப்போம்.. மரத்தை நடுவோம், விதிகளை மதித்து.. விபத்தினை தவிர்ப்போம்' என்பதை வலியுறுத்தி மாரத்தான் நடைபெற்றது.

News image

மணப்பாறையில் விழிப்புணர்வு மாரத்தான்

Updated On :28 ஆகஸ்ட் 2022, 6:08 am

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் 'மதுவைத் தவிர்ப்போம்.. மரத்தை நடுவோம், விதிகளை மதித்து.. விபத்தினை தவிர்ப்போம்' என்பதை வலியுறுத்தி மாரத்தான் நடைபெற்றது.

10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியினை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் துவக்கி வைத்து, தனது அதிவிரைவுப்படையினருடன் தானும் கலந்து கொண்டி ஓடினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் உட்கோட்ட காவல்துறை மற்றும் ஜேசிஐ வையம்பட்டி, ரோட்டரி கிளப் ஆஃப் வையம்பட்டி சார்பில்  மதுவைத் தவிர்ப்போம்.. மரத்தை நடுவோம், விதிகளை மதித்து.. விபத்தினை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற 10 கிமீ மாரத்தான் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ரயில்வே நிலையப் பகுதியிலிருந்து தொடங்கி, காவல்நிலையம், நெடுஞ்சாலை வழியாக கருங்குளம், செக்கணம் கிராமங்களில் சென்று பின் மீண்டும் வையம்பட்டியில் ஓட்டம் நிறைபெற்றது.

இதில் 14 வயது முதலான நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்று ஓடினர். கிராம பகுதியில் ஓடிய போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கிராம மக்கள் கைத்தட்டி வரவேற்பு அளித்தனர்.

இந்த மாரத்தான் போட்டியினை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், தனது அதிவிரைவுப்படை 10 காவலர்களுடன் தானும் கலந்து கொண்டி ஓடி பாதையினை நிறைவு செய்தார்.

போட்டியில் திருச்சி எட்டரை பகுதியினை சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த் முதல் இடத்தையும், மணப்பாறை பள்ளி மாணவர்கள் கவுதமன், கிருபாகரன் ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடங்களையும் வெற்றனர்.

இதில், மாணவர்கள் கவுதமன், கிருபாகரன் ஆகியோர் சகோதரர்கள் ஆவர். வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் வெகுமதி  வழங்கிய எஸ்.பி, காவல்துறை உங்கள் நண்பன் மட்டுமல்ல ஓர் பாதுகாவலனும் கூட எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.