பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் கலச ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, கலச ஊர்வலம் நடைபெற்றது.

வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் கலச ஊர்வலம்

Published On :

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, கலச ஊர்வலம் நடைபெற்றது.

வேள்விக்குடி என்ற வேளுக்குடியில் மிகப் பழமையான கோயிலான அங்காளப் பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், அங்காளப் பரமேஸ்வரி எழுந்தருளியுள்ளார். பழமையான இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் வரும் 11ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம் மற்றும் கிராம சாந்தி பூஜைகள் நடைபெற்றது. 

Story image

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை, காலை கோயில் அருகே ஓடக்கூடிய வெள்ளியாற்றிலிருந்து, புனித நீரும், விமானக் கலசங்களும் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. மன்னார்குடி -  திருவாரூர் பிரதான சாலை வழியாக, கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்களுடன், நாதஸ்வர முழக்கங்களுடன் கலச ஊர்வலம், அங்காளம்மன் கோயிலை வந்தடைந்தது. 

தொடர்ந்து, அங்காளப் பரமேஸ்வரிக்கு தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை, சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், கணேஷ் குருக்கள் உள்ளிட்டோர் கவனிதனர்.கும்பாபிஷேக ஏற்பாடுகளை, வேளுக்குடி ஸ்ரீலஸ்ரீ சடையப்ப பரம்பரை பூசாரியார் வி.எஸ்.ரமேஷ்குமார், வி.எஸ்.ராஜு மற்றும் கோயில் நிர்வாகக் குழுவினர்கள், கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கவனித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.