சிறுசேரி - கேளம்பாக்கம் இடையே கரையைக் கடக்கும் மாண்டஸ் புயல்!

மாண்டஸ் புயல் சிறுசேரி - கேளம்பாக்கம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிறுசேரி - கேளம்பாக்கம் இடையே கரையைக் கடக்கும் மாண்டஸ் புயல்!
Published on
Updated on
1 min read

மாண்டஸ் புயல் சிறுசேரி - கேளம்பாக்கம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாண்டஸ் புயலின் மையப்பகுதி நள்ளிரவு 1 மணி அளவில் கேளம்பாக்கத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் சென்னைக்கு மிக அருகே இருப்பதால் சென்னைக்கு தாக்கம் அதிகம் இருக்கும்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, தற்போது வலுவிழந்து புயலாக மாறியுள்ள நிலையில், மாமல்லபுரம் அருகே புயலின் வெளிவட்டப் பகுதி கரையை கடந்து வருகிறது.

இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 70 கி.மீ. வரை காற்று வீசுகிறது. தொடர்ந்து மாண்டஸ் புயல் 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com