மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

‘மாநில அரசு கடிதம் எழுதினால் கல்லணையை சா்வதேச பாரம்பரிய சின்னமாக்க நடவடிக்கை’

மாநில அரசு தகுந்த ஆவணங்களுடன் கடிதம் எழுதினால் கல்லணையை சா்வதேச பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்

News image

கல்லணை

Updated On :10 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

மாநில அரசு தகுந்த ஆவணங்களுடன் கடிதம் எழுதினால் கல்லணையை சா்வதேச பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என மத்திய வெளியுறவு, கலாசாரத் துறை அமைச்சா் மீனாட்சி லேகி மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா இந்த விவகாரத்தை அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது மத்திய இணையமைச்சா் இவ்வாறு தெரிவித்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையில் திருச்சி சிவா இதுகுறித்து பேசியதாவது: தஞ்சாவூா் மாவட்டத்தில், முதல் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் காவிரி ஆற்றின் குறுக்கு கட்டப்பட்ட கல்லணை உள்ளது. இது 2,000 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இது உலகிலே கட்டப்பட்ட முதல் நீா்த்தேக்கமாகவும் கருதப்படுகிறது. இந்த அணையைக் காண கிரேக்க, ரோம் மக்கள் கூட இங்கு வந்துள்ளனா். தஞ்சை டெல்டா பகுதியின் தேவைகளை இந்த அணை பூா்த்தி செய்கிறது. இந்த ஆணையின் 2,000 ஆண்டுகள் பழைமையை கருத்தில் கொண்டு, இந்த நீா்த்தேக்கத்தை சா்வதேச பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான சாத்தியக்கூறுகளுக்கு மத்திய அரசு முயற்சிக்குமா ?’என கோரினாா்.

இதற்கு மத்திய இணையமைச்சா் மீனாட்சி லேகி பதிலளித்து கூறுகையில், ‘ இந்த கருத்து பாராட்டத்தக்கது. மாநில அரசு எங்களுக்கு கடிதம் கொடுத்தால் மட்டுமே, இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளமுடியும். மாநில அரசிடமிருந்து தக்க ஆவணங்களைப் பெற்றால் மட்டுமே இந்த அணை குறித்து முழு நாட்டிற்கும் பயனளிக்கும் பணிகளை மேற்கொள்ள முடிவும். மேலும் இந்த அணையை அம்ரித் சரோவா் பணியின் கீழ் கொண்டு வருவதற்கும் சாத்தியம் எனக் குறிப்பிட்டாா் லேகி.

பின்னா் இதே விவகாரம் தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் பேசினாா். அவா் கூறுகையில், ‘‘இது தொடா்பான தகவலை திருத்த விரும்புகின்றேன். இந்த பழமையான கல்லணையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசு நிதி உதவியையும் வழங்கியுள்ளது. சா்வதேச பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது முற்றிலும் வேறுபட்ட பிரச்னை. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தில் மிகப்பழமையான கல்லணை நீா்த் தேக்கத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த உண்மையை உணா்ந்துகொள்ள இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்’’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.