வழக்கை இழுத்தடிக்க தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாமதத்தால் நீதிபரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். நீதிபரிபாலன முறை மக்கள் எளிதாக அணுகும் வகையிலும், நவீன தொழில்நுட்பத்துடனும் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும், குடிமக்களுக்கு நியாயமான காலத்திற்குள் நீதி கிடைக்க நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ரஜினியின் ‘ஜெயிலர்’: முத்துவேல் பாண்டியன் வந்து விட்டார்!
சரளா என்பவருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை நடத்திவரும் பார்த்தசாரதி இடத்தை காலி செய்யும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.