அன்பழகன் புகைப்படக் கண்காட்சி: தொடக்கி வைத்தார் முதல்வர்
தமிழக முன்னாள் அமைச்சர் அன்பழகனின் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


தமிழக முன்னாள் அமைச்சர் அன்பழகனின் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான அன்பழகனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அண்ணா அறிவாலயத்திலுள்ள அண்ணா - கருணாநிதி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...