மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம் அதிரடி!

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என வழக்குரைஞர் ரவி என்பவர் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் பயனாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி, விசைத்தறி தொழிளாா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 

இந்த மானியங்களைப் பெற ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியது.

அதில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில், வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும். வாடகைக்கு இருப்பவர்களின் எண்ணை இணைத்தால் அவர்கள் காலிசெய்யும் போது பிரச்னை ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாடகைதாரர்கள் மானியம் பெறுவது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை. அனைத்து ஒப்புதலையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவித்தது.

இந்நிலையில், மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com