கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தமிழக தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தமிழக தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (டிச.25) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேவாலயங்கள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி, சாந்தோம், பெசன்ட் நகா் போன்ற புகழ்பெற்ற தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணாக்கானோர் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

மேலும், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com