எம்ஜிஆர் நினைவிடத்தில் தனியாக வந்து மரியாதை செலுத்திய சி.வி. சண்முகம்!

எம்ஜிஆர் நினைவிடத்தில் தனியாக வந்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மரியாதை செலுத்தியது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் நினைவிடத்தில் தனியாக வந்து மரியாதை செலுத்திய சி.வி. சண்முகம்!
Published on
Updated on
1 min read


எம்ஜிஆர் நினைவிடத்தில் தனியாக வந்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மரியாதை செலுத்தியது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி,  மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். 

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமி அணியிர் மரியாதை செலுத்திவிட்டு சென்ற பிறகு தனியாக வந்து மரியாதை செலுத்தினார். 

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வந்த சி.வி. சண்முகம் திடீரென தனியாக வந்து மரியாதை செலுத்தியது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com