டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நெல்லையில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல  கொண்டாட்டம்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

DIN

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம், கத்தீட்ரல் பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்துவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கிறிஸ்துமஸ் விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில்  கிறிஸ்து பிறப்பு விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவினையொட்டி மாநகர் பகுதிகளில் சாலைகள், வீதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேவாலயங்களும் மின்னொளியில் மிளிர்ந்தன. 

பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலயத்தில்  நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க  பேராயர் அருட்திரு.அந்தோணிசாமி சவரிமுத்து கலந்து கொண்டு திருப்பலி நடத்தி நற்செய்தி வழங்கினார். இதுபோன்று கத்தீட்ரல் பேராலயத்தில் அதிகாலை 3 மணிக்கு  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

இவ்விழாவினையொட்டி, கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனையில் கலந்து கொண்டு பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.  

இதுபோன்று மாவட்டத்தில்  வள்ளியூர், அம்பாசமுத்திரம், களக்காடு , சேரன்மகாதேவி,  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது . இதில் திரளான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.