காதலிக்க கோரி பள்ளி மாணவியை பேருந்தில் தாக்கிய இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்த டிரக்டர் ஓட்டுனர் மணி(21) என்ற இளைஞர், மாதனூரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மடிகம் பகுதியை சேர்ந்த மாணவியை தான் ஒரு தலையாக காதலித்து வந்தார்.
இன்று பள்ளிக்கு தனியார் பேருந்தில் செல்லும் போது பொது இடத்தில் வைத்து காதலிக்குமாறு மாணவியை தாக்கியதாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் காவல்துறையினர் இளைஞர் மணியை விசாரிக்க சென்றபோது அவர் இல்லாததால் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மணி பள்ளிகொண்டா அடுத்த பள்ளிகுப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்த்த போது, அவர் வீட்டிற்கு அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ஆம்பூர் அருகே மீன் ஏற்றிச் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து
மேலும், காவல் துறையின் விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


