திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் செங்கரும்புகளுடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்க வேண்டும். கரும்புக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். செங்கரும்பு ஒன்று ரூ.15 என்ற விலைக்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில்100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.