கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜனவரி 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இன்று காலை மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜனவரி 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி ஜனவரி 5 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
ஜனவரி 5 ஆம் தேதிக்குப் பதிலாக பிப்ரவரி 25 ஆம் தேதி வேலை நாள் என்றும் தெரிவித்துள்ளார்.