நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மோகனூரில் பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: 4 பேர்  பலி

நாமக்கல் அடுத்த மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

News image
Updated On :31 டிசம்பர் 2022, 3:00 am

DIN

நாமக்கல்: மோகனூரில் பட்டாசுக் கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். 

Story image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தில்லைகுமார்(40). இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக அதிகளவில் வீட்டில் வாங்கி வைத்திருந்தார்.

Story image

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பட்டாசும், எரிவாயு உருளைகளும் வெடித்துச் சிதறியதில் வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தில்லை குமார், அவரின் தாய் செல்வி(60) மற்றும் மனைவி(36), பக்கத்து வீட்டு மூதாட்டி பெரியக்காள்(75) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர்.

Story image

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் வரும் பணியை மேற்கொண்டனர்.

Story image

சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மோகனூர் காவல் ஆய்வாளர் தங்கவேல் பட்டாசு வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.