நீட் விலக்கிற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு: ஓ. பன்னீர்செல்வம்
நீட் விலக்கிற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


சென்னை: நீட் விலக்கிற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் தேர்வு ரத்து குறித்து ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையிலும், அதிமுக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. நீட் விலக்கிற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...