47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘சமூகநீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது’: ஓபிஎஸ் அறிவிப்பு

தமிழக முதல்வர் முயற்சியில் உருவாகும் சமூக நீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

News image
‘சமூகநீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது’: ஓபிஎஸ் அறிவிப்பு
Updated On :5 பிப்ரவரி 2022, 1:04 pm

DIN

தமிழக முதல்வர் முயற்சியில் உருவாகும் சமூக நீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

தேசிய அளவில் சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதியைக் காக்க இந்த சமூக நீதிக் கூட்டமைப்பு உருவாக்கப்படுதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் தேசிய அளவில் சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ்), லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்), ஃபரூக் அப்துல்லா (ஜம்மு காஷ்மீா் தேசிய மாநாடு), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ), எச்.டி. தேவெ கவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), என். சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்), நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதா தளம்), மம்தா பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்) உள்ளிட்ட பாஜக அல்லாத பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கடிதத்திற்கு பதிலளித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “மத்திய அரசில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்தபோது சமூக நீதிக்காகவோ அல்லது மாநில சுயாட்சிக்காகவோ குரல்கொடுக்காமல் இருந்துவிட்டு தற்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்காத தருணத்தில் அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பை உருவாக்கி அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.