சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்தது! 5 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சையில்...
சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,292 ஆகக் குறைந்துள்ளது.


சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,292 ஆகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. நேற்று(திங்கள்கிழமை) புதிதாக 1,634 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 341 பேர்.
சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள விவரங்களின்படி,
சென்னையில் தற்போது 5,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதுவரை சென்னையில் 9,029 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
மொத்த பாதிப்பு 7,47,200 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,32,408 ஆகவும் உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 620 பேரும் தேனாம்பேட்டையில் 607 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...