தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
இதையும் படிக்க | பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்
அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நா்சரி, விளையாட்டுப் பள்ளிகள், மழலையா் காப்பகங்கள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை புத்தகக் காட்சி இன்றுமுதல் தொடங்கவுள்ள நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.