ஓமலூரில் 3 பேரூராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூன்று பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
ஓமலூரில் 3 பேரூராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

 
ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூன்று பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
 
ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் ஓமலூர், கருப்பூர் மற்றும் காடையாம்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. இதில் பதிவான வாக்குகள் ஓமலூர் பாத்திமா பள்ளி வளாகத்தில் எண்ணப்பட்டன. 

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஓமலூர் பேரூராட்சியில் (மொத்தம் – 15), திமுக-11, அதிமுக-2, தமாகா -1, சுயேச்சை – 1 வெற்றி பெற்றுள்ளனர். 11 இடங்களைப் பிடித்து ஓமலூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. 

கருப்பூர் பேரூராட்சியில் (மொத்தம் -15) திமுக-10, காங்கிரஸ்-1, அதிமுக – 3, சுயேச்சை – 1 வெற்றி பெற்றுள்ளனர். 10 இடங்களில் வென்று கருப்பூர் பேரூராட்சியை திமுக வசப்படுத்தியுள்ளது.

காடையாம்பட்டி பேரூராட்சியில் (மொத்தம்-15) திமுக -7, அதிமுக – 7 என சமமாக வெற்றி பெற்றுள்ளன. திமுக கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளதால், காடையாம்பட்டி பேரூராட்சியும் திமுக வசம் சென்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com