பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒசூர் மாநகராட்சி தேர்தல்: சட்டக்கல்லூரி மாணவி யஸஷ்வினி வெற்றி

ஒசூர் மாநகராட்சி தேர்தலில் 42 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டன.

News image
ஒசூர் மாநகராட்சி தேர்தலில் 13 வது வார்டில் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவி யஸ்ஷ்வினி.
Updated On :22 பிப்ரவரி 2022, 10:05 am

DIN

ஒசூர் மாநகராட்சி தேர்தலில் 42 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட்டன. அதில் 13 வது வார்டில் சட்டக்கல்லூரி மாணவி யஷ்வினி போட்டியிட்டார். அவர் 1146 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேவதி 506 வாக்குகளை பெற்றுள்ளார். 640 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டக்கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார். 

இவர் பெங்களூர் அல்-அமீன் சட்டக் கல்லூரியில்  மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் . இவரது கணவர் மோகன் ஒசூரில் வியாபாரம் செய்து வருகிறார். எந்த அரசியல் பின்புலம் இல்லாமல் திமுகவில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது "இவர் மக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் போட்டியிட்டது. மக்களுடன் மக்களாக இருந்து சேவை செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் சட்டக் கல்லூரியில் படித்து வந்தாலும் மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.13-ஆவது வார்டு என்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் ஏ.சத்யா ஆகியோர் பாராட்டினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.