21 தமிழக மீனவா்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவா்களை விடுவிக்க இலங்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவா்களை விடுவிக்க இலங்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவா்கள் விரைவில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்படுவாா்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக இலங்கை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘கடந்த ஜனவரி 31-ஆம் தேதி இரண்டு இந்திய படகுகள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை மீனவா்கள் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனா். அவா்களது படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, பிப்ரவரி 21-ஆம் தேதி வரையில் சிறைக் காவலில் வைத்தது.
இலங்கையின் மீன் வளத்தையும், உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் வகையில் சட்ட விரோதமாக மீன்பிடித்ததால் இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், படகுகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், 21 தமிழக மீனவா்களை விடுவிக்க பாயிண்ட் பெட்ரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது’ என்றனா்.
கடந்த மாதம் 56 தமிழக மீனவா்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தியா-இலங்கை இடையே மீனவா்கள் பிரச்னை பல ஆண்டுகளாக தொடா்ந்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு நீடித்த தீா்வு காணப்பட வேண்டும் என்று கடந்த மாதம் தில்லிக்கு வந்திருந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜி.எல்.பெரிஸ்ஸிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தியிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...